சிலந்தி - தமிழாக்கம்: எம். முஹம்மது மீராசாகிப் ( 2 )


சிலந்தி - ஆங்கிலத்தில் - ஹாரூன் யஹ்யா - தமிழாக்கம்: எம். முஹம்மது மீராசாகிப்

முன்னுரை - 2

மனிதர்களும், அவர்கள் வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளடங்கிய இப்பிரபஞ்சம் மிகவும் துல்லியமாக திட்டமிடப்பட்டு, படைப்பாளன் ஒருவனால் படைக்கப்பட்டது. அனைத்தையும் படைத்த படைப்பாளன் ஒருவன் இருக்கிறான்: அந்த படைப்பாளன் ஒருவனையே வணங்கவேண்டும் என்ற நோக்கத்துடனேயே இவ்வுலகும் அதில் உள்ள உயிரினங்களும் படைக்கப்பட்டன. அத்தகைய குறைவில்லா படைப்பாளன் குறைகளுக்கும் பலகீனங்களுக்கும் அப்பாற்பட்டவன். அப்படைப்பாளன் எல்லையற்ற ஆற்றல் மிக்கவன். அவனே இறைவன். வல்லமையும், ஆற்றலும் மிக்க படைப்பாளன் அருள்மறை குர்ஆனிலே கூறுவதுபோன்று இவ்வுலகையும், இவ்வுலகில் வாழும் உயிரினங்களையும் படைத்ததன் குறிக்கோள், ஆற்றலும் வல்லமையும் மிக்கோனின் படைப்பாற்றலை அறிந்து, இவ்வுலகம் முழுவதற்கும் இறைவனான அவனுக்கே முற்றிலும் வழிபட வேண்டும் என்பதற்காகவே. இதுபற்றி வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனிலே கூறுகின்றான்:
'மேலும் வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை. இவ்விரண்டையும்é சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்க வில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 44 ஸூரத்துத் துகான் - 38 மற்றும் 39ஆம் வசனங்கள்)

இவ்வுலகம் முழுவதற்கும் இறைவனான அவனுக்கே முற்றிலும் வழிபட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள இவ்வுலகவாழ்வில் நாம் பெற்ற அனுபவத்திறனை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. அதன் ஒரு பகுதியாக உலகில் உள்ள அனைத்து படைப்புகளையும் உற்று நோக்கி, அவைகளை நம் கவனத்தில் கொண்டு, அவைகள் நமக்கு தெரிவிக்கும் செய்திகளை உள்வாங்கி, அவைகளைப் பற்றிச் சிந்திக்கவும் வேண்டும். ஏனென்றால் உலகில் உள்ள அனைத்தும், குறிப்பாக உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கான அத்தாட்சிகளாகும்.

அல்லாஹ்வால் அருளப்பட்ட அருள்மறை குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் மூலம் அவனால் படைக்கப்பட்ட மனித சமுதாயமான நமக்கு நேர்வழி காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் நமது சிந்தனையை ஈர்க்கிறான்:

'(அல்லாஹ்) அவன் வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்கு பயன்தருவதைக் கொண்டு சமுத்திரத்தில் செல்லும் கப்பலிலும், இறந்த பூமியை உயிர்;ப்பிக்க வானத்திலிருந்து அல்லாஹ் பொழிவிக்கச்செய்யும் மழையிலும், எல்லாவிதமான கால்நடைகளையும் பூமியில் பரவவிட்டிருப்பதிலும், காற்றுகளைத் திருப்பிவிடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் கருமேகத்திலும், சிந்திக்கும் மக்களுக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.'(அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸுரத்துல் பகரா - 164 ஆம் வசனம்).

அருள்மறை குர்ஆனின் மேற்கண்ட வசனத்தை ஆய்வு செய்யும் ஒரு பொதுவான மனிதனின் கண்களுக்கு இறைமறைவசனம் குறிப்பிடும் செயல்பாடுகள் யாவும் இவ்வுலகில் அன்றாடம் நடைபெறும் சாதாரண நிகழ்வுகளாகத் தோன்றலாம். இரவும், பகலும் மாறி மாறி வருவதும், கடல்நீரில் மூழ்கிவிடாமல் சர்வ சாதாரணமாக கப்பல் கடல் நீரில் மிதந்து செல்வதும், வானத்திலிருந்து பொழியும் மழையினால் பூமி உயிர்பெறுவதும், காற்றும், கருமேகமும் வானத்தில் வலம் வருவதுமாகிய செயல்கள் அனைத்திற்கும் சில காரணங்கள் இருக்கலாம். அவற்றை நவீன விஞ்ஞானம், இயந்திரவியல் மற்றும் தர்க்கவாதம் கொண்டு விளக்கம் பெறலாம் என எந்தவித ஆச்சரியமும் இன்றி நவநாகரீக கால மனிதன் சிந்தனை செய்கிறான். நவீன விஞ்ஞானம் வெளிப்படையான பருப்பொருள் சார்ந்த உண்மைகளை உணர்த்துமேத் தவிர, இச்செயல்கள் யாவும் ஏன்? என்ற கேள்விக்கு ஒருபோதும் விடையளிப்பதில்லை. (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

சிலந்தி - தமிழாக்கம்: எம். முஹம்மது மீராசாகிப். ( 1 )


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்.

சிலந்தி - ஆங்கிலத்தில் ஹாரூன் யஹ்யா - தமிழாக்கம்: எம். முஹம்மது மீராசாகிப்.
 
சிலந்தி எனும் ஒரு சிறு படைப்பினத்தைப் பற்றிய முழு தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் எழுதப்பட்டதல்ல இந்த கட்டுரை. மாறாக ஒரு 'திறவுகோலாக' செயல்பட வேண்டும் என்பதே இக்கட்டுரைத் தொடரின் முக்கிய குறிக்கோளாகும். 'திறவுகோலாக' செயல்படப்போகும் இக்கட்டுரைத் தொடரின் பின்னணி பொருள், மனிதர்களில் பலர் தம் உலக வாழ்வில் கண்டுகொள்ளாத உன்னத உண்மைகளாகும். பரிணாமக் கொள்கை என்பது அடிப்படையே இல்லாதது என்பதை வெட்ட வெளிச்சமாக்குவது, உண்மையை அடியோடு மறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கொள்கைக்காக கொடி பிடிப்போருக்கு விளக்கமளிப்பது: உலகம் தோன்றிய நாள் முதல் மனித சிந்தனையில் உள்ள கேள்விக்கணைகள் பலவற்றிற்கு விடையளிப்பது ஆகியவையே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.

முன்னுரை

சிலந்தி என்னும் சிறிய படைப்பினமே இக்கட்டுரையின் கரு. தங்களுக்கு சுவராஸ்யம் இல்லாத ஒரு சிறிய படைப்பினம் குறித்து இக்கட்டுரை விளக்கமளிக்கும் என சில வாசகர்கள் எண்ணியிருக்கலாம். இன்றைய பரபரப்பான அன்றாட வாழ்க்கைச் சூழலில் தங்களுக்கு எவ்வித பயனும் இல்லாத ஒரு சிறிய படைப்பினத்தைப் பற்றிய இந்த கட்டுரையை படிப்பதற்கென நேரம் ஒதுக்குவதே சிரமம் எனவும் கருதியிருக்கலாம்.

இதற்கு பதிலாக அரசியல் அல்லது பொருளாதாரம் பற்றி விளக்கமளிக்கும் ஒரு கட்டுரையோ, அல்லது ஒரு கற்பனை கதையோ எழுதியிருந்தால் மிகவும் 'பயனுள்ளதாக' இருந்திருக்குமே என்றும் சிந்தித்திருக்கலாம். ஆனால் வாசகர்கள் படித்துக்கொண்;டிருக்கும் இந்த கட்டுரை அவர்கள் எண்ணியதைவிட அல்லது கருதியதைவிட அதிக பயனுள்ளதாகும். அவர்கள் எதிர்பார்த்ததைவிட முற்றிலும் வித்தியாசமான கருத்துக்களை அள்ளித்தரும். சிலந்தி என்றழைக்கப்படும் ஒரு சிறிய படைப்பினத்தைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிவிக்கும் உயிரியல் கட்டுரை அல்ல இது. சிலந்தி என்னும் ஒரு சிறு படைப்பினம் இந்த கட்டுரையின் கருவாக இருந்தாலும், படைப்பியலின் உண்மைகளும், அவ்வுண்மைகள் தரும் படிப்பினைகளுமே இக்கட்டுரையின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கமாகும்.

இக்கட்டுரை தரும் கருத்து ஒரு திறவுகோலைப் போன்று. திறவுகோலை ஒரு உலோகப்பொருளாக மட்டுமே பார்ப்போம் எனில் அதன் முக்கியத்துவம் எவருக்கும் புரிவதில்லை. இதுவரை திறவுகோலையேப் பார்த்திராத ஒருவரின் கையில் ஒரு திறவுகோலைக் கொடுப்போம் எனில் பூட்டுக்கும் திறவுகோலுக்கும் வித்தியாசம் தெரியாத அவர், திறவுகோலை பயனற்ற ஒரு உலோகப் பொருளாகவே கருதுவார். ஆனால் சில வேளைகளில் அத்திறவுகோல் திறக்கப்போகும் பொக்கிஷத்தின் உள்ளிருக்கும் பொருளின் மதிப்பைப் பொறுத்தே, திறவுகோலின் மதிப்பும் கணக்கிடப்படும். பொக்கிஷத்தின் உள்ளிருக்கும் பொருள் உலகிலேயே அதிகம் மதிப்பு மிக்கதாக இருக்கலாம்.

சிலந்தி எனும் ஒரு சிறு படைப்பினத்தைப் பற்றிய முழு தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் எழுதப்பட்டதல்ல இந்த கட்டுரை. மாறாக ஒரு 'திறவுகோலாக' செயல்பட வேண்டும் என்பதே இக்கட்டுரைத் தொடரின் முக்கிய குறிக்கோளாகும். 'திறவுகோலாக' செயல்படப்போகும் இக்கட்டுரைத் தொடரின் பின்னணி பொருள், மனிதர்களில் பலர் தம் உலக வாழ்வில் கண்டுகொள்ளாத உன்னத உண்மைகளாகும். பரிணாமக் கொள்கை என்பது அடிப்படையே இல்லாதது என்பதை வெட்ட வெளிச்சமாக்குவது, உண்மையை அடியோடு மறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கொள்கைக்காக கொடி பிடிப்போருக்கு விளக்கமளிப்பது: உலகம் தோன்றிய நாள் முதல் மனித சிந்தனையில் உள்ள கேள்விக்கணைகள் பலவற்றிற்கு விடையளிப்பது ஆகியவையே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.

நான் யார்? இப்பிரபஞ்சமும், நானும் எவ்வாறு படைக்கப்பட்டோம்? இவ்வுலக வாழ்க்கைக்கான அர்த்தமும் நோக்கமும் யாவை? என மனிதச் சிந்தனையில் உள்ள அடிப்படை கேள்விகளுக்கான பதிலே 'சிலந்தி' என்னும் 'இத்திறவுகோலின்' பின்னணியில் உள்ள மதிப்பு மிக்க பொருளாகும். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

1 வயது வரை குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்

1 வயது வரை குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்

பிரசவம் முடிந்துவிட்டால், நிம்மதி அடைந்துவிட வேண்டாம். ஏனெனில் இனிமேல் தான் வேலையே இருக்கிறது. என்ன புரியலையா? அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது. ஏனெனில் பிரசவத்திற்கு பின் சிறிது நாட்கள், அம்மா, உறவினர்கள் என்று வீட்டில் இருப்பார்கள். அப்போது எந்த பிர


1 வயது வரை குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்

பிரசவம் முடிந்துவிட்டால், நிம்மதி அடைந்துவிட வேண்டாம். ஏனெனில் இனிமேல் தான் வேலையே இருக்கிறது. என்ன புரியலையா? அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது. ஏனெனில் பிரசவத்திற்கு பின் சிறிது நாட்கள், அம்மா, உறவினர்கள் என்று வீட்டில் இருப்பார்கள். அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை. இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...


0-4 மாதம் வரை

நிறைய ஆய்வுகள், குழந்தை பிறந்த பின்னர், அவர்களுக்கு தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும் என்று சொல்கிறது. ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.


4-6 மாதம் வரை

நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.


6-8 மாதம் வரை

இந்த மாதங்களல் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.


8-10 மாதம் வரை

இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
10-12 மாதம்
இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால் பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்..!
இஸ்லாமிய நாகரிகத்தின் ஈடு இணையற்ற வரலாற்றுச் சான்றுகளுள் ஒன்று -இதோ! 

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள்.

அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.

ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள்.

அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.

உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன்.

. இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள். அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.

காகத்தை காணும் போதெல்லாம் தாய் கோழி ஒரு மாதிரி கொக்கரிப்பதும் , உடனே கோழி குஞ்சுகள் அலறி புடைத்து கொண்டு ஒளிந்து கொள்வதும் , அந்த பட்டிணத்து பிள்ளைகளுக்கு பெரும் அதிசயமாய் தெரிந்தது. ஓட்ட ஓட்டமாய் ஓடி போய் இந்த விஷயம் தாத்தாவிடம் பகிர பட்டது. லீவு விட்டால் கிராமத்துக்கு செல்லும் பிள்ளைகளுக்கு அது ஒரு ஆச்சரியமான உலகம். 'இயற்கையும், விஞ்ஞானமும் இரண்டற கலந்தவை' என அறிவிக்கும் பாடசாலை அது. கிராமத்து தாத்தாக்கள் எல்லோருமே இன்றைய பிள்ளைகள் தொலைத்திருக்கும் இயற்கை விஞ்ஞானிகள்.

காக்கை - கோழி கதையை கேட்ட தாத்தா கொஞ்சமும் அலட்டி கொள்ள வில்லை. சிரித்த படியே , அவர்களை மாட்டு தொழுவத்தின் ஒரு மூலைக்கு அழைத்து சென்றார். அங்கு இன்னொரு பெட்டை கோழி கூடை ஒன்றில் அடை படுத்திருந்தது . இவர்களை கண்ட உடனேயே , சிறகுகளை சிலிர்த்து கொண்டு 'கர்'ரென்று பெரும் ஓசையுடன்முனகியது . மெதுவாக அதை தூக்கிய தாத்தா இரண்டு முட்டைகளை மட்டும் எடுத்தார். அலுங்காமல் அவற்றை எடுத்து வந்து, ஒரு வழவழப்பான மேசை மேல் வைத்தார். அந்த முட்டைகள் அடை வைக்க பட்டு 19 நாட்கள் ஆகிறதென்றும், இன்னும் இரண்டொரு நாளில் அவை பொரித்து குஞ்சுகள் வெளி வரும் என்றும் பிள்ளைகளிடம் விளக்கினார். பின்னர் , காகத்தை கண்ட தாய் கோழி செய்யும் கொக்கரிப்பை போல தாத்தா ஒலி எழுப்பியதுதான் தாமதம்...மேசை மீது இருந்த முட்டைகள் தாமாகவே இங்கும், அ ங்கும் அலைந்து உருண்டன. குட்டி பையன்களோ, பிளந்த வாயை மூடவே இல்லை.

தாயை கண்டதுமில்லை....அதன் குரலை கேட்டதுமில்லை...காக்கையை அறிந்ததும் இல்லை...ஆனாலும், வளர்ந்த நிலையில் முட்டைக்குள் இருந்த குஞ்சுகள் ஆபத்தை அறிந்திருந்தன. இந்த மாதிரியான பாதுகாப்பு உணர்வுகள் தலைமுறைகள் கடந்த மரபு வழியாய் வந்தவை. ஆண்டவனின் அனுகிரகம் இப்படியெல்லாம் வியாபித்திருப்பதாலேயே கோழிகளும், பிற உயிர்களும் பூமியில் உலவுகின்றன. இயற்கை சமன் பாட்டில் இடமில்லாத உயிர்களிடமிருந்து இந்த அனுகூலமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் விடை பெறுகின்றன.

இப்படியும் செய்யலாம் / உதவலாம். - பாகம் 2

இப்படியும் செய்யலாம் / உதவலாம். - பாகம் 2 
*** இமாம்களையும்/முஅத்தின்களையும் பற்றி கொஞ்சம் சிந்திப்போம் ***


தினமும் கேட்கும் ஐந்து நேர பாங்கொலி. அதன் பின் அழகிய முறையில் தொழுகை சத்தம். அல்ஹம்துலில்லாஹ். அந்த இமாம்களுக்கும் முஅத்தின்களுக்கும் பள்ளியோடு அதிக தொடர்புடைய ஓர் அழகிய வாழ்க்கை. அதே நேரம் அவர்களை நம்பியும் ஓர் குடும்பம்...

இப்படியும் செய்யலாம் / உதவலாம். - பாகம் 1

இப்படியும் செய்யலாம் / உதவலாம். - பாகம் 1 
*** தாகத்துக்கு தண்ணீர் கொடுத்து மனதை குளிரச் செய்வோம் ***



உயர்ந்த மாடிக்கட்டிடம். சுட்டெரிக்கும் வெயிலில், கயிற்றில் தொங்கும் இயந்திரத்தில் நின்று கொண்டு 2 பேர் வெளியிலுள்ள ஒவ்வொரு வீட்டுக் கண்ணாடிகளையும் துடைத்துக் கொண்டிருந்தார்கள். இது அவர்களின் நாளாந்த கடினமான வேலை. அந்த வேலை முடியும் வரை பாத்ரூம் கூட செல்ல முடியாது 

இப்படியும் செய்யலாம் / உதவலாம் - பாகம் 3

இப்படியும் செய்யலாம் / உதவலாம் - பாகம் 3 
அளிப்F , Bபா, தா, சொல்லிக் கொடுப்போம்.



ஒரு மஸ்ஜிதின் மூலையில் தினமும் இஷாவுக்குப்பின் சுமார் 15 நாட்களாக ஒரு முதியவர் திக்கித் திக்கி குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார். இவருக்கு படிப்பிக்கும் ஆசானோ ஒரு சிறு பையன். யாரும் எதுவும்நினைப்பார்களோ என்று கொஞ்சமும் தயங்காத ஒரு தைரியமான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ். 

இன்னொரு பக்கம், "நானும் இவனும் பல ஆண்டு நண்பர்கள், பள்ளிக்கூடத்தில் ஆரம்பித்த நட்பு, இன்று பேரன் பேத்தி கண்ட பின்னும் இன்னும் எங்கள் நட்பு தொடர்கிறது. போகாத இடம் இல்லை, செய்யாத சேட்டை இல்லை, பள்ளிப்படிப்பு முதல் டிரைவிங், ஸ்விம்மிங் என்று ஒருவருக்கொருவர் படித்துக் கொடுத்த விடயங்கள் ஏராளம். இப்பொழுது வியாபார நண்பர்கள் கூட". இரு நண்பர்களின் மார்தட்டல் இது.

நம் சிந்தனைக்கான அருள்மறை வசனங்கள்

குழந்தையின் முதல் உணவு - தாய்ப்பால் - மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதமான அருட்கொடை..!

ஜசாக்கல்லாஹு ஹைரன் சகோதரர் - Mohammed Meera Sahib Sahib


அளவிலா கருணையும் இணையிலா கிருபையுமுடைய வல்ல அல்லாஹ்வின் பேரருளால்..!




'..உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான்: அவனே அல்லாஹ். உங்களுடைய இறைவன். அவனுக்கே ஆட்சியதிகாரம். அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க (அவனைவிட்டும்) நீங்கள் எப்படி திரு

அறிவுக்கு ஓய்வளிக்காதே !

அறிவுக்கு ஓய்வளிக்காதே !


இரண்டு பேர் மரம் வெட்டுவதற்காகக் காட்டிற்குச் சென்றனர். அவர்களுக்குப் பிழைப்பு அதுதான். எவ்வளவு அதிகமாக மரம் வெட்டி வருகிறார்களோ அந்தளவிற்கு வருமானம் அதிகரிக்கும். அன்று மாலை திரும்புகிறபோது ஒருவன் அதிகமாகக் களைப்பு இல்லாமலும் காணப்பட்டான். ஆனால், குறைவாக மரம் வெட்டியவனோ அதிகக் களைப்போடு காணப்பட்டான். 

நம் சிந்தனைக்கான அருள்மறை வசனங்கள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்..!
ஜசாக்கல்லாஹு ஹைரன் சகோதரர் - Mohammed Meera Sahib Sahib



இறைவன் ம
ுதல் மனிதனை மண்ணால் படைத்து அவரிலிருந்தே அவருக்கு ஒரு துணையையும் படைத்தான். அதன் பிறகு அந்த இருவரின் மூலமாக மனிதவர்க் கத்தைப் இந்திரியதைக் கொண்டு படைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.
(கர்ப்பக் கோளறையில்) செலுத்தப்படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு. (53:46) (உங்களைப் படைக்கின்றான்).
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா (75:37)

நம் சிந்தனைக்கான அருள்மறை வசனங்கள்

அல்லாஹ்வின் அற்புதப்படைப்பு ஒட்டகம் படைப்புகளை ஆராய்வோம்! படைத்தவனை அறிவோம்!
ஜசாக்கல்லாஹு ஹைரன் சகோதரர் - Mohammed Meera Sahib Sahib

ஒட்டகத்தை, அது எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது என அவர்கள் (கவனித்துப்) பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 88: 17)


இந்த பிரபஞ்சத்தில் உள்ள படைப்புகள் அனைத்தும் இறைவன் ஒருவன் இருப்பதை தெளிவாக காட்டுகிறது. இந்த ஒட்டகம் ஒன்றே போதும். அதை நிரூப...ிக்க, பாலைவனத்து அரபிகளால் 160க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும், முக்...கியமான பெயராக இறைவனின் பரிசு என்று அழைக்கப்படும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அதை திமிலாக்கி கொள்கிறது (சுமார் 45கிலோ எடை இருக்கும் அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்.) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக. உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது. உணவு மட்டும் கிடைத்தால் போதும் நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் காலம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காவிட்டால் கூட இரண்டின் தேவையில்லாமல் ஒரு வார காலம் பயணம் செய்யும்.

We have eyes, yet we still tend to be blind

We have eyes, yet we still tend to be blind 
This is an account of a man named Rashed. He tells his story as follows...
I was not more than thirty years old when my wife gave birth to my first child. I still remember that night.