உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?

உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?

> As Received....
>
> உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?
>
> மனோயிச்சைகளுக்கு முன்னால் மண்டியிட்டு - நீ
> பாவங்களுக்கு முன்னால் பலவீனப்பட்டு நிற்கும்போதா ?
>
> தவறை கண்ணெதிரே கண்டும்
> தட்டிக் கேட்க தைரியம் இல்லாதபோதா ?
>
> நல்லறங்களின் நன்மை அறியாமல் - அவற்றை
> நகைப்புக்குரியதாய் நீ பார்க்கும்போதா ?
>
> குர்ஆன் ஓதக்கேட்டும் அழுகை வராமல் - கேளிக்கையின்
> கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக கண்ணீர் விடும்போதா ?
>
> அறச்செயல்களில் ஆர்வம் கொள்ளாமல் - அழியப்போகும்
> அற்ப இன்பத்தை நாடி நீ ஒடும்போதா ?
>
> வணக்கமாகத் தெரிந்த வழிபாடுகள் எல்லாம் - உனக்கு
> வழக்கமான சடங்குகளாக மாறும்போதா ?
>
> சுகம் தந்த வழிபாடுகள் யாவும் - உனக்கு
> சுமையாகத் தெரியும்போதா ?
>
> இன்னல்கள் நீங்க இரவின் பின்னேரம் (தஹஜ்ஜுத் நேரம் ) இருந்தும்
> பகல் முழுவதும் நீ துக்கத்தால் துடிக்கும்போதா ?
>
> பொன்னான பொழுதுகள் வீனாகிப்போனதே என்று - நீ
> வருந்தாமல் வாளாவிருக்கும்போதா?
>
> ஆயுளின் விளிம்பில் நீ அசைந்து கொண்டிரும்போது
> பாதை மாறி விட்டதை எண்ணி வருந்தும்போதா ?
>
> அழு ! மீழு !! உன் அழுகையும் புலம்பலும் - அல்லாஹ்வின்
> அர்ஷை தட்டும் வரை அழு !!!
>
> இன்னமும் தௌபாவின் வாசல் திறந்தே இருக்கிறது - உன்
> உயிர் உனது தொண்டை வாசலை அடையாதவரை !
>
> உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?
>
> - அரபி கவிதை ஒன்றின் தமிழாக்கம்
>
>
> -- Syedali SYED MASOOD
> O ALLAH ! Guide us to the straight way!!

No comments:

Post a Comment